Sunday 3 September 2017

மண்ணில் சொர்க்கம்


இளைப்பாற மனம் நாட,
உனை  நோக்கி  நான்  வந்தேன்...

வலி பாரா பாதம் அவை,

உயரம்  காண அடிகள் வைத்தேன்...

உன்னை அடைந்த அந்த நொடி,

குருதி இன்றி தென்றல் பாய...

கண்ணை விட்டு மறையா எழில்,

மக்கள் மறக்க சுற்றம் மறந்தேன்...

தலைக்கு  மேல் நீளமும்,

காலின் கீழ் பசுமையும்,
என்னை மறந்து உயிர் பிரிந்து,
மோட்சம் அடைந்த உணர்வை கொண்டேன்...

ஏனோ எதற்கோ காரணம் அறியேன்,

அன்று கண்ட கண்ணீர் துளிக்கு...


No comments:

Post a Comment