Friday 2 January 2015

காரணகர்த்தாவாய் நீங்கள்!

வேர்  கொண்ட  விருட்சத்தில் ,
சிற்றிலையாய்  உதிதேன் ...

தனிமையின்  பரிச்சயத்தில் ,
நிமிடங்களை  கழித்தேன் ...

என்  கிளையை  பகிர்ந்தீர் ,
உடன்  உறவை  தொடர்ந்தீர் ...

தென்றல்  சாய்க்க, மௌனம்  முன்பு ,
மௌனத்திலும்  வார்த்தைகள்  இன்று ...

சாரல்  தீண்ட , சிலிர்ப்பு  முன்பு ,
வெதுவெதுப்பாய்  நின்   பாடல்கள்  இன்று ...

வானவில்  சாயம் , களிப்பு  முன்பு ,
சாயம்  வாய்த்த  புகைப்படங்கள்  இன்று ...

பூக்கள்  மலர , விசேஷங்கள்  முன்பு ,
விசேஷமாய்  மினன்சல்கள்  இன்று ...

உறக்கம்  தொல்லை , பசியில்  முன்பு ,
சந்திக்க  காணும்  கனவுகள்  இன்று ...

மயிலின்  நடனம் , மிஞ்சினோம்  முன்பு ,
திரையில்  அதன்  பதிப்புகள்  இன்று ...

மன  பெட்டிக்குள்  பாதுகாக்க ,
நிறைந்து  வழியும்  நினைவுகள் ...

ஏன்  மறந்தீர்  மறக்க  பயில்விக்க ?
திறந்த  வெளியாய்  ஏக்கத்துடன் ,
என்றும்  அன்புடன்  என்  இதயம் ...

No comments:

Post a Comment